Sunday, May 31, 2009

Labels: ,

சூரியன்

தனது உயரத்தை
நியாயப்படுத்தவே
உயர் கோபுரங்களின்
நிழல்களை நிலமட்டத்தில்
பரவுவதில்
ஆர்வம் காட்டும்-இவன்
கதிர்கள்.

Labels:

Saturday, May 30, 2009

தொடக்கம்


காலமெல்லாம் ஒருவேளையாவது
தேவைப்படும் ஆகாரம்
பெறஏங்கும் போதெல்லாம்
அதற்காக..
அறிவென்றும்
அனுபவமென்றும்
பதவி யென்றும்
செல்வமென்றும்
அதனால்..தான்
ஆகாரமென்றும்
பலருரைக்க நான் கேட்டேன்
உண்மை - ஆனால்
பருவத்திற்கு முன்னே
பொய்யாய் இருந்தாலும்
பிற்காலத்திற்காக
தேவையானவற்றை
சேகரிக்கத் தொடங்குவோம்

Labels: